Informational article on Organic Soap in Tamil
சோப்பு என்பது அதிக காரத்தன்மை (alkaline) கொண்ட கரைசலில், அமிலத் தன்மை (acidic) கொண்ட கொழுப்புக்களைக் (திரவங்களைக்) கலந்து, விடாமல் வெகுநேரம் இளக்கினால் உருவாகும் ஒரு கட்டி. பெரும்பாலும் சோப்பு தயாரிக்க lye எனப்படும் காஸ்டிக் சோடாவே பயன்படுத்தப் படுகிறது. இயற்கைக் குளியல் சோப் என்றால் காஸ்டிக் சோடாவைத் தவிர மற்ற இடுபொருட்கள் யாவும் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்டால், அச்சோப்பு இயற்கைக் குளியல் சோப் என்று கருதப்படுகிறது.
உதாரணமாக, தேங்காய் எண்ணை, வேப்ப எண்ணை போன்ற எண்ணைகளுடன், காஸ்டிக் சோடாவைக் கலந்து சோப்பு கையால் தயாரித்தால் அதை இயற்கை குளியல் சோப்பு என்று அழைக்கலாம்.
அதற்கு ஒரு படி மேலே போய், அதில் பயன்படுத்தப்படும் எண்ணைகள் எல்லாம் மென்செக்குகளில் (cold pressed oils) நுண்ணூட்டம் குறையாமல் ஆட்டப்பட்டும், கொப்பரை போன்ற மூலப் பொருட்கள் இயற்கை வேளாண்மையில் சாகுபடி பண்ணப் பட்டும் இருந்தால் அதை ஆர்கானிக் சோப்பு என்று அழைக்கலாம்.
எங்கள் தயாரிப்பான டூடில் சோப் ஒரு ஆர்கானிக் சோப்பு ஆகும்.
சோப்புக் கட்டியானது ஓரளவாவது காரத்தன்மையுடன் இருந்தால்தான் சுத்தம் செய்யும். ஏனெனில், நம் தோலில் சீபம் (sebum) எனப்படும் ஒரு அமிலத்தன்மை கொண்ட எண்ணெய் இயல்பாகவே சுரக்கிறது. இது நம் தோலைப் பாதுகாக்க இயற்கையாய் உள்ள ஒரு விஷயம்.
அழுக்கும், தூசியும், பாக்டீரியாக்களும் இந்த சீபம் என்னும் அமிலத்தில் ஒட்டிக்கொண்டு, வியர்வையோடு ஒரு பிசுபிசுப்பை ஏற்படுத்தி விடுவதால் நாம் குளிக்கும் போது சோப்பு தேவையாகிறது. இயற்கை உணவை உண்டு, சூழல் மாசில்லாத இடங்களில் வாழ்பவர்களுக்கு சோப்பு என்பது தேவையே இல்லை.
சுமார் 4800 வருடங்களுக்கு முன், முதன்முதலில் சோப்பைக் கண்டு பிடித்தவர்கள் பாபிலோனியர்கள் என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் மரச்சாம்பலையும் (காரத்தன்மை), மிருகக் கொழுப்புக்களையும் (அமிலத் தன்மை) நீருடன் கரைத்துக் கொதிக்க விட்டு சோப்புக் கட்டிகளைச் செய்தனர்.[1]
கையால் செய்த சோப் என்றால், கொழுப்பையும், காஸ்டிக் சோடாவையும் கலக்க எந்த வித இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் பாத்திரத்தில் இரண்டையும் கையால் கரண்டி கொண்டு இளக்கி சோப்பு தயாரிப்பதே. (பெரும்பாலான கைசோப்புக்கள் stick-blender எனப்படும் ஒரு மின்-மத்தைக் கொண்டு செய்யப்படுகின்றன. எனினும் அவை யாவும் கையால் செய்யும் சோப்புக்கள் என்றே கருதப்படுகின்றன).
ரசாயன வேளாண்மையில் யூரியா போன்ற உரங்களும் விஷத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை கொதிக்க வைத்தோ, நீரில் கழுவியோ அகற்ற இயலாது. நம் உடலில் மற்றும் தோலில் இவை நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன.
சோப்பில் ரசாயனக் கலப்புள்ள எண்ணைகளைப் பயன்படுத்தினால் அவற்றில் உள்ள நச்சுக்கள் நம் சருமத்தைப் பாதிக்கக் கூடும். எனவே ஆர்கானிக் சோப்பு பயன்படுத்துவதன் மூலம் நம் சருமம் மிகவும் நன்மை பெறும்.
Doodle Soap, தூய்மையான ஆர்கானிக் சோப் ஆகும். எங்கள் , கையால் செய்யப் பட்ட இயற்கைக் குளியல் சோப்புக்களை (Natural Handmade Soaps ) வாங்கிப் பயனடையவும். - 100g சோப் Rs 95 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். 100g for Rs 95/- only!
At Doodle Soapery we make the finest organic, cold process, natural handmade soaps at an affordable price of Rs 95 for 100g.
[1] https://en.wikipedia.org/wiki/SoapWe publish unbiased information on handmade soap, its benefits, disadvantages, how to choose your soap, various flavours of soap, their benefits and other useful information on handmade natural soaps.
We also publish well-researched informational articles on skin-care in general.